Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மார்ச் 26, 2020 10:39

சுவாமிமலை: தஞ்சை மாவட்டம், சுவாமிமலை பேரூராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் நோய் பரவுதலை தடுக்கும் நடவடிக்கையாக சுவாமிமலை பேரூராட்சி பகுதிக்குள் நுழையும் எல்லைப்பகுதிகளில் திருவையாறு - மேலரோடு சந்திப்பு, திருமஞ்சனவீதி காவேரி பாலம் அருகில் மற்றும் கீழஇலுப்பை தோப்பு காவல் நிலையம் அருகில் ஆகிய 3 இடங்களில் தனியாக  சின்டெக்ஸ்  டேங்க் அமைத்து பொதுமக்கள் சுகாதாரத்தை பேணும்  வகையிலும் கை, கால், முகம் கழுவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுவாமிமலை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜதுரை தலைமை வகித்தார். கொரோனா வைரஸ் நோய் பரவல் விழிப்புணர்வு மற்றும் பின்பற்றும் நடைமுறைகள் ஆகியவைகளை பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் வருவாய் கோட்டாசியர்  வீராசாமி,  கும்பகோணம் வட்டாட்சியர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். இன்டெக்கோ டிராஸ்ட் பார் கல்சுரல் அன்ட் சோசியல் ஆக்டிவிட்டி நிர்வாக இயக்குநர் சிந்து சாய்குமார்  பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று தங்களது கைகள், கால்கள்  முகத்தை கழுவி பயன்பெற்றனர்.
 

தலைப்புச்செய்திகள்